Tuesday, July 27, 2010

என் வாழ்க்கை வளி




உயிரிலே மழையென
ஒரு கோடிப் பூக்கள்..
உன் ஓரவிழிப் பார்வையிலே
உருவான ஆற்றல்..

வெட்கப்பட்டு சிறுநேரம்
வாய் பொத்திச் சிரித்தாய்..
மாநிலமே பயனுற
மின்சாரம் கொடுத்தாய்..

கற்றைக் கூந்தல் அவிழ்த்தாய்
புவியியல் மாற்றம்..
அவசரமாய் தரையிறங்கிய
சூரியனுக்கு ஏமாற்றம்..

என் சிந்தனை
ஒரு கானகம்..
நீ அந்தரத்தில்
வானகம்..
சாரலின் கைகளில்
தீப்பொறி தருகிறாய்..
செய்யாதே
அது பெரும்பாதகம்..

என் நெஞ்சில்
வலி ஆயிரம்..
போகும் வழி
ஓரிடம்..
ஆய்வுகள் செய்து
கண்டறிந்தேன்..
என் வாழ்க்கைக்கான
வளி உன்னிடம்..

- அரவிந்த் குமார்.பா

No comments:

Post a Comment