Monday, July 26, 2010

கடவுளின் தேசம்





எங்கெங்கு காணினும்
தண்ணீர்..
இங்கு மேகத்தில் வழியுது
பூவாகப் பன்னீர்..

ஆகாயம் மறைக்கின்ற
மரங்கள் - அவை
ஆதாயம் பார்க்காமல்
அள்ளித்தரும்
கரங்கள்..

ஈரமே காயாத
சாலை - அதைப்
பார்த்தாலே பூக்குது
என்னெஞ்சில்
சோலை..

இயல்பாக
இரண்டு கரை தொட்டு - அந்த
நதி செல்லும் அழகிலே
மலருமுயிர்
மொட்டு..

விதை மண்ணில்
விழுந்தாலே போதும் - அதை
இயற்கையே கவனிக்கும்
நேராது
சேதம்..

நகரத்தில் மாசில்லா
காற்று - நான்
கவனித்தேன்
பொய்யில்லை
நிஜமான கூற்று..

மண்ணையே
காணவில்லை எங்கும் - முழுக்க
புல்லே
மறைத்தெழில் புன்னகை
பொங்கும்..

குனிந்தால் கிணறுகளில்
எட்டும் - தண்ணீரைக்
காய்ச்சினால் போதும்
சர்க்கரையே
கிட்டும்..

அதிசயம் மனிதனின்
கொடுங்கை - பக்கம்
இருந்தாலும்
பச்சையாய் சிரிக்குது
இயற்கை..

எப்போதும் சாரலும்
தப்பாத தூரலும்
கோடையே காணாத
மாநிலம் - ஆம்
அது - எவரையும்
கவிஞராய் மாற்றிவிடும்
கேரளம்..

- அரவிந்த் குமார்.பா


No comments:

Post a Comment