Thursday, July 29, 2010

எனை நானே கண்டேன் இன்று..




எனை நானே
கண்டேன் இன்று
தூளியிலே
மழலையாக..

அடடா
என் சந்தோசங்கள்
கண்ணோரம்
துளிகளாக..

இறைவா..
என் வாழ்வில்
இந்நேரம் - இணையில்லா
தருணம்
எந்நாளும்..

உலகத்தின் வசந்தங்கள்
எல்லாமும் - இவன்
உருவத்தில் வந்ததது
போலாகும்..

ஆயுள் முழுவதும்
தவம் செய்தாலும்
கிடைக்கா
வரமே..

என் ஆவலை
ஆயிரம் மடங்கு
நிறைத்தாய் - என்றாலும்
தகுமே..

உன் பேரழகை
உலக மொழிகளில்
உரைக்கத்தான்
முடியுமா..

இந்தப் பேருலகில்
அழகென்ற
மற்றவையெல்லாம்
ச்சும்மா..

என் வாழ்க்கை
கரிசற்காடு..
நீ வந்தாய்
மழைமுகிலோடு..
இனி
புல்லினங்கள்
செய்யுள்கள் பாடும்
புதிதாய்ப் பூக்கும்
பூக்களோடு..

- அரவிந்த் குமார்.பா

No comments:

Post a Comment