![]() | எனை நானே கண்டேன் இன்று தூளியிலே மழலையாக.. அடடா என் சந்தோசங்கள் கண்ணோரம் துளிகளாக.. இறைவா.. என் வாழ்வில் இந்நேரம் - இணையில்லா தருணம் எந்நாளும்.. உலகத்தின் வசந்தங்கள் எல்லாமும் - இவன் உருவத்தில் வந்ததது போலாகும்.. ஆயுள் முழுவதும் தவம் செய்தாலும் கிடைக்கா வரமே.. என் ஆவலை ஆயிரம் மடங்கு நிறைத்தாய் - என்றாலும் தகுமே.. உன் பேரழகை உலக மொழிகளில் உரைக்கத்தான் முடியுமா.. இந்தப் பேருலகில் அழகென்ற மற்றவையெல்லாம் ச்சும்மா.. என் வாழ்க்கை கரிசற்காடு.. நீ வந்தாய் மழைமுகிலோடு.. இனி புல்லினங்கள் செய்யுள்கள் பாடும் புதிதாய்ப் பூக்கும் பூக்களோடு.. - அரவிந்த் குமார்.பா |
No comments:
Post a Comment