Friday, July 23, 2010

உன்னை நினைத்து..

உன்னை நினைத்தே உன்னை நினைத்தே
உருளும் என் வாழக்கை..
எந்த தினத்தில் எந்த கணத்தில்
தீரும் இந்த வேட்கை..

சிந்தை முழுதும் உந்தன் உருவம்..
கந்தலானது எந்தன் கருவம்..
இந்த மாற்றங்கள் தந்தவளே
எரியும் நெஞ்சம் எப்போது அணையும்..

சாரலில் நனைகிறேன்
உன் தோளில் சாய்ந்த சுகமில்லை..
உன் தேடலில் திரிவதால்
நிகழ்வதெல்லாம் நினைவிலில்லை..

வானவில் கடக்கிறேன்
உன் துப்பட்டாவின் அழகில்லை..
சுவாசம் மட்டும் என்னிடம்
மிச்சத்தை உன்னிடம் மீட்கவேயில்லை..

நீதான் கண்மணி..
என் கனவுகள் முழுமைக்கும்
நெருப்பு வைத்தாய்..

எரிகிறேன் தினமும்
வாழ்கின்ற வாழ்க்கையை
வெறுக்க வைத்தாய்..

கண்ணீர் தொடாத விழிகளை
நீ உப்புக் கடல் போல்
கரிக்க வைத்தாய்..

மகிழ்ச்சி மறந்த
மனிதன் என்னை
மறுபடி எப்போது சிரிக்க வைப்பாய்..

- அரவிந்த் குமார்.பா

No comments:

Post a Comment