Tuesday, July 27, 2010

வார்த்தை தெரியவில்லை




வார்த்தை தெரியவில்லை
உன் நளினத்தைப் புகழ..

மலர் - வாசமதை
மொழியா லெப்படி எழுத..

சாரல் தொடங்கையிலே
ஒரு சுகந்தம் பரவுமே - அதைப்
போலி ருமடங்கு
உனது மௌனமே..

உன் மெல்லிய நடைய ழகை
முகில் சொல்லியபடி யலையும்..
அதுபோல்தான் - உன் புன்னகை
கண்ட பூக்களின் நிலையும்..

கடலளவு மலையளவு
பெருஞ் செல்வம் தந்தாலும்
அவை வேண்டாம் - நகமளவு
உன் ஸ்பரிசம் தருவாயா..

விழியழகு மொழியழகு
அதையெ ல்லாம் மிஞ்சி விடும்
உடையில்லா உடல ழகால்
என் தோளில் சாய்வாயா..

என் பிஞ்சுத் தங்கமே..
நான் பெற்ற சிங்கமே..

- அரவிந்த் குமார்.பா

No comments:

Post a Comment