![]() | வார்த்தை தெரியவில்லை உன் நளினத்தைப் புகழ.. மலர் - வாசமதை மொழியா லெப்படி எழுத.. சாரல் தொடங்கையிலே ஒரு சுகந்தம் பரவுமே - அதைப் போலி ருமடங்கு உனது மௌனமே.. உன் மெல்லிய நடைய ழகை முகில் சொல்லியபடி யலையும்.. அதுபோல்தான் - உன் புன்னகை கண்ட பூக்களின் நிலையும்.. கடலளவு மலையளவு பெருஞ் செல்வம் தந்தாலும் அவை வேண்டாம் - நகமளவு உன் ஸ்பரிசம் தருவாயா.. விழியழகு மொழியழகு அதையெ ல்லாம் மிஞ்சி விடும் உடையில்லா உடல ழகால் என் தோளில் சாய்வாயா.. என் பிஞ்சுத் தங்கமே.. நான் பெற்ற சிங்கமே.. - அரவிந்த் குமார்.பா |
No comments:
Post a Comment