Monday, August 2, 2010

கனல் நிலவே




கனல் நிலவே - என்
கனவுக்குள் புகுந்து
கலவரமூ ட்டுகிறாய்..

மெதுமெதுவாய் - என்
நினைவுக்குள் புகுந்து
நிலவரம் மாற்றுகிறாய் ..

ஆவியானது
என் உயிர் மொத்தம்..
உன் ஜோதி விழியில்
எத்தனை வெப்பம்..

உன் பாதிப்புன்னகை
கண்டது பிழையா..
இந்தப் பாதிப்புகள்தான்
காதலின் விலையா..

வேண்டுமென்றே
கண் முன்னால் - நீ
நடந்து போகின்றாய்..

உன் விழியின் குழியில்
விழுவேனா வென்று
விரதமி ருக்கின்றாய்..

மறந்தும் கூட
மௌனச் சுவரை
உடைக்க மறுக்கின்றாய்..

உன் பருந்துப்
பார்வைக் கெலி போலென்னை
உணர வைக்கின்றாய்..

அருவியில்
குதிக்கச் சொன்னால்
அடுத்த நொடியில்
குதிப்பேன்..

உன் அருகில்
போய் வரச் சொன்னால்
அய்யோ முடியாமல்
துடிப்பேன்..

உலகம் முழுதும்
எனதென் றாலும்
இல்லையெ னக்கு
மகிழ்ச்சி..

என் கவனம்
குலையாமல்
உன் கண்களைப்
பார்த்தால் - அதுவே
பெரிய புரட்சி..

விழாமல்
உன் விழி
எதிர் கொள்ளப்
பழகிக் கொள்கிறேன்..

உன் கலாப மொழி
அத்தனையும்
கற்றுக் கொள்கிறேன்..

பலாச் சுளை
கன்னங்களை
நினைத்துக் கொள்கிறேன்..

இந்த நிலாப் பெண்ணை
மனைவியாக்க
முயற்சி செய்கிறேன்..

- அரவிந்த் குமார்.பா


No comments:

Post a Comment