Monday, August 2, 2010

செவத்தவளே..




செவத்தவளே
என் செவத்தவளே
என்ன சிரிச்சே
செயிச்சவளே..

என் கண்ணுல
மெதுவா தடுக்குனதால
நெஞ்சுல
விழுந்தவளே..

நீ
ஓரமாப் பாத்ததெல்லாம்
காரமாப் பாத்ததெல்லாம்
வேகமா புத்தியில் போயி
மத்தியில் நின்னு
பொதஞ்சதடி..

ஓன் ஈர உதட்டில்
குடிவர
ஏன் பேருக் கென்னைக்கு
யோகமோ..

அந்த நாளத் தேடி
நூலாப் போறேன்..

செவத்தவளே - என்
செவத்தவளே

காட்டு வெள்ளம் - அது
ஓடி வந்தா
எந்தப் பாதையும்
பாப்பது இல்ல..

ஏன் பாட்டு வெள்ளம் - அது
அது ஓடிவர
ஓன் பார்வையத்
தேடுது புள்ள..

செவத்தவளே - என்
செவத்தவளே

ஒரச்ச மழ
பேயையில
வெரச்ச மண்ணு
கரைவதப் போல

நீ சிரிச்சுக்கிட்டே
பாத்ததுல
உசுர் அரிச்சுக்கிட்டு
போயிருச்சே..

மொளச்ச வெத
பூமிக்குள்ள
தொளச்சுக்கிட்டு
வாரதப் போல

வெடிச்சுருச்சு
ஓன்னெனப்பு
மூளையோட
முடிச்சுக்குள்ள..

போகாதுன்னு
நெனச்ச
ஏம்மனச
நீ கைப்பிடிச்சு
கூட்டிப் போயிட்ட..

வேணாமுன்னு
கெடந்த
உயிர்க் கொழுந்த
நீ மய்ய வச்சு
மயக்கிப்புட்ட..

தீராமக் கெடந்த
ஏந்திமிரில
நீ
தீய வச்சுப்புட்ட..

காப்பாத்துன்னு
நான்
கதற
நீ
கைய்ய விரிச்சுப்புட்ட..

- அரவிந்த் குமார்.பா


1 comment:

  1. அழகா கவிதை சொல்லிட்டு உளறல் கள்னு தலைப்பா??//

    ReplyDelete