நீதானா
என் பெயர் சொல்லி
அழைத்தவள்.
என் உயிர்க்குள்ளே
நிலைத்தவள்.
நலம்தானா
என் சுகம் சரிக்கும்
உன் கண்கள்
என் அகம் பெயர்த்த
உன் இதழ்கள்.
இப்போதுதானா
கிடைத்தது
நேரம்..
இன்றுதானா
விடை பெற்ற துன்
நாணம்..
படபடவெனப்
பேசும் மொழி
எங்கே..
தடதடவென
ஓடும் கால்கள்
எங்கே..
முதன்முதல் வந்த
காதலதைச் சொல்ல
அத்தனையும் இன்று
அடமானம் வைத்தாயோ..
மெதுமெதுவாய்
காதல் சொன்ன பிறகு..
துறுதுறுவெனத்
துளிர்க்குமோ சிறகு..
சரசரவென
இழந்தவை யத்தனையும்
அப்புறமாய் வட்டியுடன்
மீட்பாயோ..
தனியே வந்தபின்
ஏனடி
தள்ளி நிற்கிறாய்..
கவிதை நேரமிது
பிறகேன்
கண்ணீர் வடிக்கிறாய்..
கவலை
பேச வேண்டாம்..
வா..
நிறையக் காதலைப்
பேசுவோம்..
காத்திருக்கிறது
வெளியே
இயற்கை -
வா.. அதனிடம்
வாழ்த்துக்கள் வாங்குவோம்..
- அரவிந்த் குமார்.பா
No comments:
Post a Comment