![]() |
|
Monday, August 2, 2010
செவத்தவளே..
காதல் சொல்ல வந்தாள்
என் பெயர் சொல்லி
அழைத்தவள்.
என் உயிர்க்குள்ளே
நிலைத்தவள்.
நலம்தானா
என் சுகம் சரிக்கும்
உன் கண்கள்
என் அகம் பெயர்த்த
உன் இதழ்கள்.
இப்போதுதானா
கிடைத்தது
நேரம்..
இன்றுதானா
விடை பெற்ற துன்
நாணம்..
படபடவெனப்
பேசும் மொழி
எங்கே..
தடதடவென
ஓடும் கால்கள்
எங்கே..
முதன்முதல் வந்த
காதலதைச் சொல்ல
அத்தனையும் இன்று
அடமானம் வைத்தாயோ..
மெதுமெதுவாய்
காதல் சொன்ன பிறகு..
துறுதுறுவெனத்
துளிர்க்குமோ சிறகு..
சரசரவென
இழந்தவை யத்தனையும்
அப்புறமாய் வட்டியுடன்
மீட்பாயோ..
தனியே வந்தபின்
ஏனடி
தள்ளி நிற்கிறாய்..
கவிதை நேரமிது
பிறகேன்
கண்ணீர் வடிக்கிறாய்..
கவலை
பேச வேண்டாம்..
வா..
நிறையக் காதலைப்
பேசுவோம்..
காத்திருக்கிறது
வெளியே
இயற்கை -
வா.. அதனிடம்
வாழ்த்துக்கள் வாங்குவோம்..
- அரவிந்த் குமார்.பா
பச்சைப் பசுங்குயில்
இச்சைக் கருங்குயில்
இப்போது இல்லை என் பக்கம்..
எங்கள் சிறகுகள்
உரசிய சிருங்கார மேகங்கள்
என்னை கேலி செய்து
சிரிக்குது நித்தம்..
கரையில் நடந்தேன்
அலையோடு
ஆறுதல் கிடைக்க..
மழையில் நனைந்தேன்
அழும் போது
கண்ணீரை மறைக்க..
கலைந்து போனது
கனவெல்லாம்..
சிலுவை யானது
நினைவெ ல்லாம்..
மறந்து போக
முயற்சி செய்தேன்
மறதியின் குருதியைக்
குடித்து விட்டாள்..
ஒரு நொடியில்
காதல் கலைந்து போனதும்
என் செடியின்
இலைகள் காய்ந்து போனது..
இன்னொரு மழையில்
துளிர்க்க நினைத்தேன்
சருகாய் இருந்தும்
உதிர மறுக்கிறாள்..
- அரவிந்த் குமார்.பா
கனல் நிலவே
![]() |
|