அது சுகமான இரயில் பயணம்.. என் தோளோடு உன் சயனம்..
மறுபடி ஒருமுறை கேட்டாலும் நிகழாத ஒரு தருணம்..
உன் கூந்தல் முடிகள் ஒன்றிரண்டு என் மீசையொடு கை கோர்த்தனவே..
உன் சுரிதார் சிறகுகள் நீண்டு வந்து என் தோள் தொட்ட ணைத்தனவே..
உன் காற்கொலுசுகள் சொன்ன இரகசியங்களை கைவளை வந்து காதருகே சொன்னதே..
உன் பாற்கடல் நெற்றியில் என்-னைவிரலும் படகாக ஆசை கொண்டதே..
பார்த்தேன் நம் பாதணிகள் ஓரமாய் இணையானதை..
உற்றேன் நம் கைப்பைகள் உற்சாகமாய் ஊஞ்சலாடி யதை..
உன்னைத் தொட்டு வந்த போது தென்றல் - சுகமாய்த் தெரிந்ததை..
உன் சவாசம் - என்னைச் சுட்ட போது காற்றில் தீப்பற்றிக் கொண்டதை..
எனக்காகவே பெண்ணாகியவளா நீ..
என்னைக் - காணவே இரயிலே றியவளா நீ..
எண்ணிக் கொண்டே உன்னில் இலயித்தேன்.. என்னை மறந்து தூங்கித் தொலைத்தேன்..
இரயில் நின்று செல்வதாய் - உள்ளுணர்ந்ததால் இரகசியமாய் விழித்தேன்..
அய்யோ.. நீ அருகில் லாததால் உன்னைத் தொலைத்தே- னென்று துடித்தேன்..
அவசரமாய் வாசல் நின்று சந்திப்பெல்லாம் சளித்தேன்.. உன்னைக் காணோமென்று சலித்தேன்..
அதோ அதிகாலை - அருகாமை - நடைமேடை - வெண்ணாடை - பறக்கும் கூந்தல் - நடக்கும் ஏஞ்சல் - போவது.. நீதானென்று கணித்தேன்..
நீ திரும்பிச் சிரித்தாய் - நான் சாகாமல் பிழைத்தேன்...
- அரவிந்த் குமார்.பா
|
No comments:
Post a Comment